Saturday 27th of April 2024 11:40:09 AM GMT

LANGUAGE - TAMIL
-
கொரோனாவுடன் தப்பி ஓடிய பெண் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை!

கொரோனாவுடன் தப்பி ஓடிய பெண் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை!


கொரோனா வைரஸ் தொற்றுடன் ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், தமது குழந்தையுடன் தப்பிச் சென்ற பெண்ணை தேடுவதற்கு 03 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

மேலதிகமாக, சுகாதார பிரிவினரும், ஏனைய பிரிவினரும் வெள்வேறு இடங்களில் தேடுதல்களை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இரத்தினபுரி - எஹெலியகொட பகுதியைச் சேர்ந்த 25 வயதான குறித்த பெண், நேற்றுமுன்தினம் இரவு 9 மணி அளவில் தமது இரண்டரை வயதான குழந்தையுடன் ஐ.டி.எச் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றார்.

எஹெலியகொட பிரதேசத்திலுள்ள பெண்ணின் வீட்டிலிருந்து நேற்று காலை குறித்த இரண்டரை வயதான குழந்தை மாத்திரம் மீட்கப்பட்டது.

இந்த நிலையில் குறித்த பெண்ணை தேடும் பணியில் பொலிஸார் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளனர்.

அதேவேளை குறித்த பெண்ணைக் கண்டால் தகவல் வழங்குமாறு பொலிஸ் தலைமையகத்தினால் தொடர்பிலக்கமும் வழங்கப்பட்டுள்ளது.

011-243 3333, 011-242 1111, 119


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE